ADDED : அக் 02, 2025 01:56 AM

அ நிறம் | அளவு
கடலுார்: புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு, ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி., தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி மதுக்கடத்தல் அதிகரிப்பதை தடுக்கும்பொருட்டு, கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், அதிவிரைவு படை வீரர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்துவரும் வாகனங்களை ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் அவர்கள் உடனிருந்தார்.
