/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்
ADDED : மே 10, 2025 01:33 AM
கடலுார்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு நாளை சிறப்பு ஹோமம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு நாளை (11ம் தேதி) காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து தங்க கவசம், புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது.
9:00 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் யாக சாலையில் எழுந்தருளுகிறார். 10:00 மணிக்கு நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம், 12:00 மணிக்கு வசுத்தரா ஹோமம், 12:30மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து கலச நீரைக்கொண்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.