/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம்
/
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம்
ADDED : டிச 25, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மாணவர்களை அரசுப்பள்ளிகளில், சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி துவங்கியது.
புவனகிரி கல்வித்துறை அலுவலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'அரசுப்பள்ளிகளை ஆதரிப்போம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் வவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், புவனகிரி வட்டாரக்கல்வி அலுவலக பணியாளர்கள் பொன்முடி, செந்தில், சுகுணா, அனுராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக்கல்வி அலுவலர் செல்வம், டாக்டர் கதிரவன், புவனகிரி ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர்.
ஆசிரியை அகிலா நன்றி கூறினார்.

