/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் சிறப்பு திட்ட முகாம்
/
பெண்ணாடத்தில் சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஆக 22, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சேர்மன் அமுதலட்சுமி முகாமை துவக்கி வைத்தார்.
இதில், 1 முதல் 8 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில், மகளிர் உரிமைத் தொகை பெற வரும் பெண்களுக்கு சிறப்பு பகுதி அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அப்போது, தாசில்தார் உதயகுமார் உட்பட அனைத்துறை அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.