ADDED : டிச 31, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு நேற்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாம பூஜைகள் துவங்கியது.
தொடர்ந்து சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், குழந்தை சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழா குழவினர் செய்திருந்தனர்.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.