ADDED : மார் 31, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் கே.என்.பேட்டை சிவசக்தி தொண்டு நிறுவனத்தின், சிவசக்தி சிறப்பு பள்ளியின் 20வது ஆண்டு விழா நடந்தது.
தொழிலதிபர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் வள்ளி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் எஸ்.பி.,ஜெயக்குமார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
வழக்கறிஞர் சந்திரசேகர், அறக்கட்டளை நிர்வாகிகள் முத்துவரதன், சிராஜிதீன், ஜோஸ்மகேஷ், முருகன் மற்றும் அந்தோணிராஜ் வாழ்த்திப் பேசினர். விழாவில் கவுசல்யா, தேவராஜன், ஹேமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

