/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : அக் 06, 2025 01:47 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது.
பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ராஜகோபால சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திருப்பதி ஏழுமலையான் அலங்காரமான திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதே போன்று, சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மேலகோட்டை வீதி சாந்த ஆஞ்சநேயர், ஆலடி ரோடு ராம ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.