ADDED : ஜூலை 24, 2025 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழக பொறியியல் புல அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் கீதா, செயல் அலுவலர் கோமதி, தனி அலுவலர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் தமிழ்செல்வி, கவுன்சிலர்கள் அன்பரசு, வேலு, வேலாயுதம், சபரி, லட்சுமி, சந்திரா, விஜயலட்சுமி, தேவிகா, தி.மு.க., நிர்வாகிகள் ஆனந்த், கருணாநிதி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மு காமில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.