ADDED : ஆக 29, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு, நகர மன்ற தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களை பெற்று, துாய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
முகாமில், ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கினர். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷ்னர் கிருஷ்ணராஜன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் மற்றும் 15 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.