ADDED : செப் 02, 2025 09:59 PM

புவனகிரி; மேல்புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் வரவேற்றார்.
தலைமையிடத்து கூடுதல் துணை தாசில்தார் வேல்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி, சப் இன்ஸ்பெக்டர் லெனின் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் அன்பரசன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.
பூதவராயன் பேட்டை, ஆலம்பாடி கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித் தனர்.
தொடர்ந்து மக்களோடு முதல்வர் திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பயனாகளிகளுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.
முகாமில் வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கனிமொழி, மணிவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.