/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 25, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களில், 3 மொபைல் போன்கள் திருடு போனதாக மாவட்ட சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின்படி, சைபர் க்ரைம் போலீ சார் காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திருடு போன மொபைல்கள், பெண்ணாடம் பகுதிகளில் உள்ள சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 3 மொபைல் போன்களை மீட்டு, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதனை, இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் ஆகியோர் உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.