sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு

/

கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு

கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு

கழிவறை பணி தடுத்து நிறுத்தம்; விருதை பஸ் நிலையத்தில் பரபரப்பு


ADDED : செப் 25, 2024 11:40 PM

Google News

ADDED : செப் 25, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் 1.28 லட்சம் ரூபாயில் புதிதாக கழிவறை கட்டும் பணி நேற்று நடந்தது.

இதையறிந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து, பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது, 'இங்குள்ள படிக்கட்டு வழியாக ஆலடி சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், கடைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கழிவறை கட்டினால் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பாக சென்று வர முடியாது.

எனவே, மாற்று இடத்தில் கழிவறை கட்டுங்கள்' என கூறினார்.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன், நகராட்சி பொறியாளர் சசிகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், திறந்தவெளியாக இல்லாமல், மேற்கூரை அமைப்பதால் எந்த பிரச்னையும் வராது என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இருப்பினும் பெண்கள் சமாதானம் அடையாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று தற்காலிகமாக பணியை நிறுத்திவிட்டு, நகர்மன்ற சேர்மனிடம் தகவல் தெரிவித்து பணியை தொடர முடிவு செய்யப்பட்டது. கழிவறை கட்டும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us