sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு

/

 சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு

 சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு

 சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு


ADDED : டிச 29, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் வெள்ளி மோட்டான் தெரு சோலை வாழியம்மன் கோவிலில் ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்துவந்த விநோத வழிபாடு நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் சோலைவாழி மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டுதலின்பேரில், ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு பெண் வேடமிட்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஆண் வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கிறது.

அதன்படி, இந்தாண்டு ஆண், பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நேற்று நடந்தது.

ஆண், பெண் வேடமிட்டவர்கள் ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

பின், சோலைவாழி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சிறப்பு அழைப்பாளர் காங்., மாநகர தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர்குமார், ஊர் முக்கியஸ்தர்கள் சவுந்தர்ராஜ், முருகன், செந்தில்குமார், சிவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us