ADDED : செப் 18, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப். 19–
கடலுார் சில்வர் பீச்சில் கல்லுாரி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் சில்வர் பீச்சில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை, ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், அவர் கடலுார், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும், அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு பயிலும் அவர், தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னையில் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
உடன், போலீசார், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
