sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை

/

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை


ADDED : பிப் 08, 2025 02:06 AM

Google News

ADDED : பிப் 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்:பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் காவேரி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு - ஸ்ரீவித்யா தம்பதியரின் மகள் கோவஸ்ரீ, 16; இவர், கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று யூனிபார்ம் இல்லாததால், கோவஸ்ரீ வகுப்பிற்கு செல்லாமல், விடுதியிலேயே இருந்தார். மாலை வகுப்பு முடிந்து சக மாணவிகள் விடுதிக்கு வந்தபோது, குளியலறையில் கோவஸ்ரீ துாக்கில் தொங்குவதை கண்டு திடுக்கி அதிர்ச்சி அடைந்தனர். உடன் விடுதி ஊழியர்கள் கோவஸ்ரீயை மீட்டு, நெல்லிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கோவஸ்ரீயின் தந்தை வடிவேலு இறந்ததும், தாய் ஸ்ரீவித்யா கடந்த 3 மாதங்களாக கோவஸ்ரீயை பார்க்க விடுதிக்கு வரவில்லை. அந்த மனஉளைச்சலில் கோவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us