ADDED : செப் 25, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகரில் பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடலுார் முதுநகர் பிள்ளையார் மேடு பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவரது மகன் மூர்த்தி விஜய், 15, முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு ஏன் சரி வர செல்வதில்லை என தாய் கண்டித்துள்ளார். அதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தாய் கோமதி கொடுத்த புகாரின்பேரில் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.