sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆதார் மையங்களில் ஊக்கத்தொகைக்கு குவியும் மாணவர்கள்...  அவதி   சர்வர் வசதியை சீராக்க நடவடிக்கை தேவை

/

ஆதார் மையங்களில் ஊக்கத்தொகைக்கு குவியும் மாணவர்கள்...  அவதி   சர்வர் வசதியை சீராக்க நடவடிக்கை தேவை

ஆதார் மையங்களில் ஊக்கத்தொகைக்கு குவியும் மாணவர்கள்...  அவதி   சர்வர் வசதியை சீராக்க நடவடிக்கை தேவை

ஆதார் மையங்களில் ஊக்கத்தொகைக்கு குவியும் மாணவர்கள்...  அவதி   சர்வர் வசதியை சீராக்க நடவடிக்கை தேவை


ADDED : நவ 17, 2025 01:33 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: ஆதார் மையங்களில், சர்வர் வசதியை சீராக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பொதுத்தேர்வு, ஊக்கத்தொகை, 100 நாள் திட்டப்பயனாளிகளுக்கு ஊதியம் என அஞ்சல் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இயங்கும், ஆதார் சேவை மையங்களில் பயனாளிகள் குவிந்து வருகின்றனர்.

கல்வி, ஊதியம், உதவித்தொகைகள், மருத்துவம், வணிகம் உட்பட அனைத்து நிலைகளிலும் ஆதார் சேவை கட்டாயமாக்கப்பட்டது.

இதனால், பொது மக்கள் பாதிக்காத வகையில் நகரில் பல இடங்களில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட்டு, சேவை எளிதாக்கப்பட்டது.

அதன்படி, விருத்தாசலம் நகரில் தலைமை அஞ்சல் அலுவலகம், ரயில் நிலையத்தில் மெயில் சர்வீஸ் மையம், இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுபோல், மாவட்டம் முழுதும் நுாற்றுக்கணக்கான சேவை மையங்கள் செயல்படுகிறது.

இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், 15 வயது நிரம்பியவர்களுக்கு பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை செய்து தரும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுபோல், கல்லுாரிகளில் முதல் பட்டதாரி உள்ளிட்ட உதவித்தொகை பெறும் மாணவர்களும் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைத்தல், புகைப்படம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் வங்கிகள் மூலம் ஊதியம் பெறவும் ஆதார் எண் சரிபார்க்கப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் ஆதார் சேவை மையங்களில் காலை 8:00 முதல், மாலை 6:00 மணி வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, சேவை பெறுகின்றனர். இவர்களை வரிசைப்படுத்தி, முறைப்படுத்த முடியாமல் ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.

சிலர், அவர்களுக்குள் முண்டியடித்தபடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் ஆதார் சேவை மைய பயனாளர்கள் அதிருப்திக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், அடிக்கடி சர்வர் கோளாறு பிரச்னையும் ஏற்படுவதால், ஒவ்வொரு சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்வது, புகைப்படம் எடுப்பது என நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

இதனால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயனாளர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே, ஆதார் சேவை மையங்களில் சர்வர் வசதி தடையின்றி செயல்படும் வகையில் எளிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதாக பயன்பெற்று சென்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதியம் பாதிப்பு

குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க வருவோர், கிராமங்களில் இருந்து ஒருநாள் ஊதியத்தை தவிர்த்து நகர பகுதிகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிர்வாக ரீதியாக உடனடி சேவை கிடைக்காமல் தாமதம் ஏற்படுவதால், இரவு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. . சிலர், இரவில் காத்திருக்க முடியாமல் மறுநாள் வர வேண்டிய தேவை ஏற்படுவதால், ஒருநாள் ஊதியத்தை இழக்கின் றனர்.








      Dinamalar
      Follow us