sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது

/

கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது

கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது

கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது


ADDED : அக் 18, 2024 11:14 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இலவச கட்டாய கல்வி திட்ட தொகை விடுவிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலுார் முதுநகரை சேர்ந்தவர் பாலசண்முகம். அதே பகுதியில் தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார்.

இவர், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணம் 14 லட்சத்து 57 ஆயிரத்து 56 ரூபாயை விடுவிக்கக்கோரி, கடலுார் மஞ்சக்குப்பத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன்,50; என்பவரை அணுகினார்.

அதற்கு, அவர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து பாலசண்முகம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்ற பாலசண்முகம், அங்கிருந்த அலுவலக கண்காணிப்பாளரிடம் கொடுத்தார்.

லஞ்ச பணத்தை வாங்கிய கணேசனை, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் கணேசனை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us