ADDED : பிப் 20, 2024 03:01 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் தேரோட்டத்தின்போது மின்துண்டிப்பை தவிர்க்க, புதைவழித்தட மின்பாதை அமைக்க, ஆய்வு செய்யப்பட்டது.
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டத்தின்போது, காந்தி சாலை, ராஜாஜி சாலை பகுதிகளில் மின விநியோகம் நிறுத்தப்பட்டு தோராட்டம் முடிந்த பின், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் நாள் முழுவதும் துண்டிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க, அப்பகுதியில் புதைவட மின் கேபிள்கள் பதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, மின்வாரியம் சார்பில் 33 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இப்பகுதியில் புதைவழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, மின்துறை செயற்பொறியாளர் ராமசந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சத்தியநாராயணன், சிவக்குமார் , உதவி பொறியாளர்கள் ராம்குமார், பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

