
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜையும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.
பாமா ருக்குமணி சமேதராய் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேணுகோபால சுவாமியை வழிபட்டனர்.
மேலும், அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

