/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
/
அரசு கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
ADDED : மார் 08, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், தமிழாய்வுத்துறை சார்பில் தமிழ் மன்ற விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். முதுகலை மாணவி சிவரஞ்சனி வரவேற்றார். கடலுார் பெரியார் அரசு கல்லுாரி இணைப் பேராசிரியர் பன்னீர்செல்வம் அச்சம் தவிர் என்ற தலைப்பில் பேசினார்.
அதில், பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கவிதைகள், கட்டுரைகளை எடுத்துரைத்தனர். பேராசிரியர்கள் சிவக்குமார், புவனேஸ்வரி, ராணி, ராதா, சிவக்குமார் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
இளங்கலை மாணவி சரண்யா நன்றி கூறினார்.

