ADDED : பிப் 19, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் அடுத்த வீரசோழகன் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஷீலா தலைமை தாங்கினார். தமிழாசிரியர் கலியபெருமாள் வரவேற்றார். சிதம்பரம் ரெட்கிராஸ் சங்க இயக்குனர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கினார். பட்டி மன்றம், தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் தீர்த்தமதி நன்றி கூறினார்.

