/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஓரணியில் தமிழ்நாடு' ஆலோசனை கூட்டம்
/
'ஓரணியில் தமிழ்நாடு' ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் நகர தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்த்தல் தொடர்பாக வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், முன்னிலை வகித்தனர். 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பரணி சந்தர், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாராயணன். நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் ராஜா, பார்த்திபன், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

