ADDED : மார் 25, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மார்ச் 24ம் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில், காச நோய் தினத்தையொட்டி நேற்று கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தல்குமார் தலைமையில் காசநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜசேகர், இணை இயக்குநர் குமார், துணை இயக்குநர் பொற்கொடி, துணை இயக்குநர் (காசநோய் பணிகள்)கருணாகரன், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.