ADDED : டிச 27, 2024 07:37 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கம்மாபுரம் அடுத்த ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தனபால், 58. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்தார். மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு 7:00 மணியளவில், சு.கீனனுார் கிராமத்திற்கு பைக்கில் சென்றார். அப்போது, கம்மாபுரம் காலனியை சேர்ந்த சேகர் மகன் தமிழ்வாணன், 21, ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. அதில், தனபால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த தமிழ்வாணன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.