ADDED : அக் 29, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பாதிரிபுலியூர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கம்மியம்பேட்டை ஜெ.ஜெ. நகர் சிவன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சுர்ஜித், 32, என தெரிந்தது. அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார், சுர்ஜித் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.