/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : மே 16, 2025 02:42 AM

கடலுார்: பண்ருட்டி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவாமூரை சேர்ந்தவர் சரவணன் மகன் பொன்மாணிக்க வேல், 20; இவர், கடந்த 2022ம் ஆண்டு, மலட்டாறு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, பொன்மாணிக்க வேலை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார். இவ்வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், பொன்மாணிக்கவேலுவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.