/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'போக்சோ' வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
/
'போக்சோ' வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஏப் 26, 2025 09:45 AM

கடலுார் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்ப ழகன் மகன் ராமலிங்கசுவாமி, 19; இவர், கடந் தாண்டு செப்., 9ம் தேதி, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
புகாரின் பேரில், ராமலிங்கசுவாமியை கைது செய்த சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது கடலுார் 'போக்சோ' சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றம் நிருபிக்கப்பட்ட ராமலிங்க சுவாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.