/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குள்ளஞ்சாவடியில் ரயில் மோதி வாலிபர் பலி
/
குள்ளஞ்சாவடியில் ரயில் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 18, 2024 06:42 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே ரயில் மோதி வாலிபர் உடல் சிதறி இறந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த, வழுதலம்பட்டு அருகே ரயில் பாதையில் நேற்று காலை வாலிபர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், கடலுார் துறைமுக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது, இறந்து கிடந்த வாலிபர், குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம், தெற்கு தெருவை சேர்ந்த கிஷோர்குமார், 22; என்பது தெரியவந்தது. அதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில்மோதி இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து கடலுார் துறைமுக ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.