/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்பியை மிதித்த வாலிபர் படுகாயம்
/
மின்கம்பியை மிதித்த வாலிபர் படுகாயம்
ADDED : ஜூன் 18, 2025 05:07 AM
கடலுார்: கடலுார் முதுநகர் அருகே மோட்டாரில் குளிக்கச்சென்ற வாலிபர், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து படுகாயமடைந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன்,25; இவர் கடந்த 10ம் தேதி தனது நண்பர் ஜான்கிட்,29, என்பவருடன் உப்பங்கேணியிலுள்ள தனியார் மோட்டாரில் குளிக்கச் சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஜான்கிட், படுகாயமடைந்தார்.
இதில் தலை, கழுத்து, முதுகு, கால்களில் பலத்த அடிபட்டு புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.