ADDED : டிச 03, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கோவில் கலசத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த அம்மேரிமேடு விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த ஒன்றரை அடி உயர கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, கோவில் கலசத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.