sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திடீர் வெள்ளத்தால் தற்காலிக சாலை மீண்டும்... துண்டிப்பு: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் பாதிப்பு

/

திடீர் வெள்ளத்தால் தற்காலிக சாலை மீண்டும்... துண்டிப்பு: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் பாதிப்பு

திடீர் வெள்ளத்தால் தற்காலிக சாலை மீண்டும்... துண்டிப்பு: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் பாதிப்பு

திடீர் வெள்ளத்தால் தற்காலிக சாலை மீண்டும்... துண்டிப்பு: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் பாதிப்பு


ADDED : ஆக 12, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே திடீர் வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை மூன்றாவது முறை துண்டிக்கப்பட்டதால் இரு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்-அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை உள்ளது.

இதன் வழியாக அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதேப் போன்று, பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம், வடகரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆண்டுதோறும் மழை காலங்களில் இரு மாவட்டங்களை இணைக்கும் இந்த தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்வதும், பின்னர் சாலை அமைத்து பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால் மழை காலங்களில் கடலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு 10 கி.மீ., துாரம் சுற்றி முருகன்குடி மேம்பாலம் வழியாகவும், 15 கி.மீ., துாரமுள்ள பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாகவும் பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்வதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த பாதிப்பை தவிர்க்க கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.

பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை பணி மந்தமாக நடக்கிறது.

கடந்த சில நாட்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஆணைவாரி மற்றும் உப்பு ஆகிய ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீரால் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் சாலை 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, கிராமப் பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

3வது முறையாக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டதால் இரு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மேம்பாலத்தின் இருபுறமும் கிடப்பில் போடப்பட்ட இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆபத்தான பயணம் மேம்பாலத்தின் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை பணிகள் மந்தமாக நடக்கிறது. தற்போது, மழை பெய்து வருவதால் பாலத்தின் இருபுறமும் கொட்டப்பட்ட மண் சாலையில் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சறுக்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் சூழல் உள்ளது.








      Dinamalar
      Follow us