/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவிலில் தெப்பல் உற்சவம்
/
மலையாண்டவர் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED : ஜன 19, 2024 08:18 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம்17 ம் தேதி புதன்கிழமை கரிநாள் திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.
நேற்று 18 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

