ADDED : மார் 02, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.

