/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறநிலையத்துறை 'சீல்' வைத்த வீட்டை திறந்து கணக்கெடுப்பு
/
அறநிலையத்துறை 'சீல்' வைத்த வீட்டை திறந்து கணக்கெடுப்பு
அறநிலையத்துறை 'சீல்' வைத்த வீட்டை திறந்து கணக்கெடுப்பு
அறநிலையத்துறை 'சீல்' வைத்த வீட்டை திறந்து கணக்கெடுப்பு
ADDED : ஏப் 19, 2025 06:35 AM

விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை என சீல் வைத்த வீட்டை திறந்து, வழக்கறிஞர் குழுவினர் கணக்கெடுப்பு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள், காலி மனைகளில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமித்து வருவாய் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில், கோவிலை சுற்றியுள்ள நான்குமாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, கடந்த 2019, ஜனவரி 3ம் தேதி நடந்தது.
அப்போது, வடக்குகோபுர வீதியில், நாதஸ்வர வித்வான் சின்னப்பிள்ளை என்பவர் வசித்து வந்த வீட்டிற்கு வாடகை செலுத்தவில்லை எனக்கூறி, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வீட்டிற்குள் பொருட்கள் இருப்பதாக சின்னப்பிள்ளை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, வீட்டிற்குள் பொருட்கள் உள்ளதா என்பதை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கோவில் செயல் அலுவலர் மாலா உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் நேற்று பகல் 11:30 மணியவில், சீல் வைக்கப்பட்ட வீடு திறக்கப்பட்டது. நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆறுமுகம் அடங்கிய குழுவினர், வீட்டிற்குள் இருந்த பொருட்களை கணக்கெடுத்தனர்.
இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்த வீட்டை திறந்து, அங்குள்ள பொருட்களை கணக்கெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

