ADDED : ஜூன் 11, 2025 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் துறைமுகம் அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் துறைமுகம் அடுத்த அக்கரைகோரியைச் சேர்ந்தவர் ரகுபதி மகன் காளிதாஸ்,23. வாய் பேச முடியாதவர். கடந்த 9ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.