sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடை வீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி அவதி

/

 கடை வீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி அவதி

 கடை வீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி அவதி

 கடை வீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி அவதி


ADDED : டிச 13, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதியில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் திறந்தவெளியில் அவதியடைகின்றனர்.

விருத்தாசலத்தில் பிரதான பகுதியான கடைவீதியில் பெருவணிக நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள பஸ் நிறுத்தம் வழியாக பெண்ணாடம், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், கும்பகோணம் மார்க்க பஸ்கள் செல்கின்றன.

ஆனால், பல ஆண்டுகளாக கடைவீதியில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

மழை காலத்தில் அருகிலுள்ள கடைகளில் தஞ்சமடையும்போது, வியாபாரம் பாதிப்பதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக நிழற்குடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் பயணிகள் திறந்தவெளியில் பஸ்சுக்கு காத்திருந்து அவதியடந்து வருகின்றனர்.

எனவே, கிராமப்புற பயணிகள் நலன் கருதி கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பெருநகரங்களை போல இருக்கையுடன் கூடிய சுற்றுச்சுவர் இல்லாத நிழற்குடை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us