/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் மதுபாட்டில் கடத்தி சென்றவர் கைது
/
டாஸ்மாக் மதுபாட்டில் கடத்தி சென்றவர் கைது
ADDED : அக் 12, 2024 05:33 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக்கில் டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம் - முகுந்தநல்லுார் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த 34 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.