ADDED : ஜன 15, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் இறந்தது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை, ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன், 62.
இவர் கடந்த மாதம் 22ம் தேதி தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
படு காயமடைந்த ரகுராமன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.