நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முதியவர் காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,70;  மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வலிப்புநோய் பாதிப்பு காரணமாக கடந்த 21ம் தேதி, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதியவர் கடந்த  23ம் தேதி நள்ளிரவு முதல் காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

