sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை

/

ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை

ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை

ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை


ADDED : டிச 04, 2024 09:26 AM

Google News

ADDED : டிச 04, 2024 09:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பெரிய கங்கணாங்குப்பத்தில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை, வெள்ளப்பெருக்கிற்கு தாக்கு பிடிக்க முடியாமல், ஒரே ஆண்டில் அலங்கோலமாக மாறிவிட்டது.

கடலுார், பெரியகங்கணாங்குப்பம் முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலையை அகலப்படுத்தி, மழைநீர் வடிகால் மற்றும் சென்டர் மீடியன் அமைக்கும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெரிய கங்கணாங்குப்பம் அருகே, கடலுார்- புதுச்சேரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பெரிய கங்கணாங்குப்பம்-மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு சாலை பணி முடிந்து ஒரு ஆண்டே ஆகிறது. பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தாக்குபிடிக்க முடியாமல் இச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இவ்வளவு தொகை செலவு செய்து போடப்பட்ட சாலை, ஒரே ஆண்டில் பெயர்ந்து அரசின் நிதி விணாகி விட்டதே என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us