ADDED : நவ 22, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: விபத்தில் காயமடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த சிங்காரதோப்பை சேர்ந்தவர் வாழ்முனி, 55; மீனவர். இவர் கடந்த, 21ம் தேதி, சிங்காரத்தோப்பு பாலம் அருகே, டீக்கடை முன்பு தனது பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த பைக் மோதியதில் வாழ்முனி காயமடைந்து, சிகிச்சைக்காக புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

