/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் ஏறும்போது தவறி விழுந்தவர் சாவு
/
பஸ் ஏறும்போது தவறி விழுந்தவர் சாவு
ADDED : அக் 01, 2024 06:50 AM
கடலுார்: கடலுார் அருகே, பஸ் ஏறும் போது தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 43; கூலித்தொழிலாளி. இவர், மனைவி மனோன்மணி, 35; இருவரும், நேற்று முன்தினம் கடலுார் பஸ் நிலையம் அருகில் உள்ள துணிக் கடையில் துணி எடுத்தனர்.
பின்னர் இருவரும் ஊருக்கு செல்ல துணிக் கடை அருகே பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு பஸ்சில் பின் படிக்கட்டில் ஏறினர். அப்போது ராஜாமணி தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடன் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், ராஜாமணி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.