/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி உற்சவம்
/
பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி உற்சவம்
ADDED : பிப் 10, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த தை அமாவாசை தீர்த்தவாரியில், பாடலீஸ்வரர் சுவாமி எழுந்தருளினார்.
கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் தை அமாவாசையையொட்டி, நேற்று தீர்த்தவாரி நடந்தது. அதில், பெண்ணையாறு சங்கமிக்கும் இடத்தில் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சுவாமி எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று திரும்பிய சுவாமியை, வழி நெடுகிலும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.