/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கோவில்களில் தேய்பிறை சஷ்டி வழிபாடு
/
விருதை கோவில்களில் தேய்பிறை சஷ்டி வழிபாடு
ADDED : செப் 14, 2025 01:36 AM
விருத்தாசலம் : தேய்பிறை சஷ்டியையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிக்கு தேய்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு அபி ேஷகம், ஆராதனை நடந்தது.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேப் போன்று, மணலுார் ஆதி கொளஞ்சியப்பர், மங்கலம்பேட்டை பால தண்டாயுதபாணி கோவில்களிலும் சஷ்டி வழிபாடு நடந்தது.