ADDED : பிப் 18, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கோவிலில், திருப்பிரதிஷ்டை நாள் (கும்பாபிேஷக நாள்) உற்சவம் கடந்த 14ம் துவங்கியது. தினமும் காலை, மாலை ேஹாமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை நடந்தது. நேற்று காலை விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.