/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
/
ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED : பிப் 19, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் கிடாம்பி ஆச்சான் கோவிலில், திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் கடந்த 14ம் துவங்கியது.
தினமும் காலை, மாலை ேஹாமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை நடந்தது. நேற்று முன்தினம் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.
நேற்று காலை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடந்தது.

