ADDED : ஆக 04, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பண்ருட்டி அடுத்த கருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடந்தது.
தமிழ் ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி நடந்தது. ஆசிரியர்கள் சம்பத், ஞானசரஸ்வதி போட்டிகளை நடத்தினர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.