நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெய்வேலி அடுத்த காட்டுக்கூடலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை குணசெல்வி தலைமை தாங்கினார். ஆசிரியை திருமகள் வரவேற்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் முற்றோதல் மற்றும் திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆசிரியைகள் பிரேமா, கஸ்துாரி, கீதா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் மரிய அந்துவான், கிருஷ்ணமூர்த்தி, உஷா, விமலி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.