/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்குளம் சீரமைப்பு பணி அதிகாரிகள் ஆய்வு
/
திருக்குளம் சீரமைப்பு பணி அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 26, 2025 05:14 AM
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளம் சீரமைக்கும் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திட்டக்குடி நகராட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் திருக்குளம் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த 2022ல் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
தொடர்ந்து, திருக்குளம் சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருக்குளம் சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் பெருமாள் ஆய்வு செய்தார். உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், உதவி பொறியாளர் பிரகாஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் சிவபிரகாசம் உடனிருந்தனர்.